பொறியியல் பணி: தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் இன்று பகுதியளவில் ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (செப்.9) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பேரணி யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






