1,000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதை ரகங்கள்!
மரபு ரக விதைகளைப் பகிர்வு செய்யும் பணியை இந்தியா முழுவதும் பரவலாக மேற்கொண்டு வருகிறேன். விதைகளை ஒரு போதும் காசுக்காக விற்கக் கூடாது என்பது என்னுடைய கோட்பாடு.
மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயம், அசத்தும் பிரியா!
`விதைதான் விவசாயிகளின் பேராயுதம்' என்று அடிக்கடி சொல்லி வந்தார், `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். அவரைப் பின்பற்றி இயற்கை வேளாண்மை செய்துவரும் பலரும் பாரம்பர்ய மரபு விதைகளை மீட்டெடுத் தல், அவற்றைப் பரவலாக்கம் செய்தல் போன்ற மகத்தான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த `விதைத்தீவு' பிரியா ராஜநாராயணன். இவர், 3 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருவ தோடு 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரக விதைகளைச் சேகரித்து மறு உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் பரவலாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு மாலைப்பொழுதில் பிரியா ராஜநாராயணனைச் சந்தித்தோம். ``நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எம்.பி.ஏ முடித்து விட்டு, எய்ட்ஸ் மறுவாழ்வு மையத்தில் ஃபைனான்ஸ் மேனேஜராக வேலை பார்த்து வந்தேன். இதற்கிடையில், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியலில் எனக்கு ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.


