அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி சாதனை
திண்டிவனம் தாலுகா, மயிலம் ஒன்றியம் செ.கொத்தமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 1949ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது.
பிறகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2011ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இன்று வரை உயர்நிலைப் பள்ளியாக மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.
இப்பள்ளிக்கு கொத்தமங்கலம் ஊராட்சி தலைவி மலர்கொடி பூபதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சாமிக்கண்ணு, லட்சுமணன ஆகியோர் மூலமாக பள்ளிக்கு 80 செண்ட் (3,240 சதுர பரப்பளவு) நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
