₹50 ஆயிரம் முதலீடு... கைக்கு வந்தது நஷ்டம்... விழுப்புரம் வெண்டை விவசாயிகளுக்கு அடி மேல் அடி
500 ஏக்கருக்கும் அதிகமான வெண்டை பயிர்கள் எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், வேலியம்பாக்கம், அத்தியூர், திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் வெண்டை பயிர்கள், தற்போது எல் நினோ விளைவால் ஏற்பட்ட கடும் கோடை வெயில் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெண்டை வயல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலான 'எல் நினோ'வின் விளைவாக, வழக்கத்தை விட அதிகரித்துள்ள கோடை வெயில், இப்பகுதியில் வெண்டை சாகுபடியை வெகுவாகப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ₹50,000 வரை முதலீடு செய்து லாபம் ஈட்டிய விவசாயிகள், இந்த ஆண்டு நோய்த் தாக்குதலால் கடும் நஷ்டத்தைச் சந்திப்பதாக சிவ கிருஷ்ணன் என்ற விவசாயி தெரிவித்துள்ளார்.


