“டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவி... ரூ.1 கோடி!” பேராசிரியர்களைக் குறிவைத்து நடந்த சதுரங்க வேட்டை!
நாளாக நாளாக எந்தவொரு ஆர்டரும் வரவில்லை. கேட்கும்போதெல் லாம், `பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள், ஆர்டர் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்’ என்று கூறுவார்.
“அரசு வேலை வாங்கித்தருவதாகப் பண மோசடி செய்யும் சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே போஸ்ட்டிங் போடுகிறேன்’’ என்று பலரிடமும் பல கோடிகளை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஷயம் இதுதான். ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், `அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) உறுப்பினர் ஆக்குகிறேன், அதிக வருமானமும், அரசு மரியாதையும் கிடைக்கும்’ என்று பல மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களிடம் ஆசைகளைத் தூண்டிவிட்டு, கோடிகளில் மோசடி செய்ததாக முதற்கட்டமாக நாமக்கல், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.


