“ரூ.50 லட்சம் வசூல் பண்றோம்... போலீஸுக்கும் கட்டிங் தர்றோம்!”
வேலூரை சீரழிக்கும் ‘லாட்டரி’ மாஃபியாக்கள்
வேலூரில் பலருடைய வாழ்வாதாரத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கும் வெளிமாநில லாட்டரிகளின் விற்பனையைத் தடுக்காமல், உள்ளூர் போலீஸாரே உடந்தையாக இருப்பதாகப் பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ‘மாதத்துக்கு ரூ.50 லட்சம் டார்கெட்’ வைத்து வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படும் இந்த லாட்டரி விற்பனை குறித்து களத்தில் இறங்கி விசாரித்தோம்.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், வெளிமாநில லாட்டரிகளின் பெயரில் பல்வேறு வகையான சூதாட்டங்கள் இன்றளவும் புழக்கத்தில் இருக்கின்றன. குறிப்பாக, வேலூர் மாநகரில் காவல் நிலையத்துக்கு அருகிலேயே லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


