அரசு பஸ் மோதி மாணவி உயிரிழப்பு: பெற்றோருக்கு ரூ.28 லட்சம் இழப்பீடு
சென்னை: அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில், அவரது பெற்றோருக்கு 28.42 லட்சம் ரூபாயை போக்குவரத்து கழகம் வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் தேவபிரியா, 17. இவர், 2023 டிச., 27ம் தேதி கல்லுாரி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக, திருவண்ணாமலை பேருந்து நிலையம் சென்றார். அப்போது, அங்கு வந்த அரசு பேருந்து, மாணவி மீது மோதியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் வசிக்கும் தேவபிரியாவின் பெற்றோர், 49 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


