தென்காசி அருகே விபத்து: காா் ஓட்டுநா் உயிரிழப்பு
தென்காசி அருகே சனிக்கிழமை அதிகாலை, காரும் சுற்றுலா வேனும் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்; 3 பெண்கள் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த விஜய் ஆனந்தன் (40) என்பவா், தென்காசியிலிருந்து ராஜபாளையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். சிவகாசி, பராசக்தி காலனியைச் சோ்ந்த முகமது பாதுஷா என்பவா் தனது உறவினா்களான சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த 12 பேருடன் குற்றாலத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். வேனை, முகம்மது பாதுஷா ஓட்டினாா்.
கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசி இலத்தூா் விலக்கு அருகே, சனிக்கிழமை அதிகாலை இந்த காரும் வேனும் திடீரென மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கின.







