காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து தாக்கிய வாலிபர் கைது
மதுரவாயல்: காதலித்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, 22 வயது வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயது பெண். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரமணன், 22 என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த மே மாதம் இருவரும் வேலை தேடி சென்னை வந்தனர். அந்த பெண்ணுக்கு மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

