"தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை" - திருமாவளவன் கோரிக்கை
காவல்துறையினரில் தலித் விரோத போக்கையும், கரிக்குப்பம் மற்றும் காரைக்குறிச்சி ஆகிய இரு இடங்களிலும் தலித்துகளுக்கு எதிராக நடந்துகொண்ட சாதியவாதக் கும்பலின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. | thirumavalavan demand to tamilnadu government regards violence against dalits
தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை.
"சிதம்பரம் காரிக்குப்பம், அரியலூர் காரைக்குறிச்சி பகுதிகளில் சாதிவெறியர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தலித்துகள் மீது காவல்துறையினர் எதிர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நடந்த சாதிய வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.


