ஹைக்கூ கவிஞர்களின் சங்கமம்: தேடுங்கள்! சரியான ஹைக்கூவைக் கண்டடைவீர்கள் !
2026, ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்தே சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நோக்கி, ஹைக்கூ கவிஞர்கள் பல ஊர்களிலிருந்தும் வரத்தொடங்கினர்.
இராசபாளையம், புதுக்கோட்டை, மதுரை, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என இன்னும் பல ஊர்களைச் சேர்ந்த கவிஞர்களும் உற்சாகத்தோடு வந்துசேர்ந்தனர்.
சென்னையில் கடந்த 2025 ஜூன் 7-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டு, கடந்த 13 மாதங்களாகத் தொடர்ந்து ஹைக்கூ தொடர்பான நிகழ்வுகளை நடத்திவரும் "ஹைக்கூ முற்றம்' அமைப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க, கவிஞர்கள் ஆர்வத்தோடு அன்றைக்கு வருகைதந்தனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)







