''தவெக அரசும் ரோகித் வெமுலா நிலையை உருவாக்குகிறது" -அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் கண்ணீர்
மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அமைச்சர் வன்னியரசை நோக்கி கேள்வி எழுப்பியும், கோரிக்கை வைத்தும் மாணவர் பாரதிதாசன் பேசியுள்ளதாவது, ''என்னுடைய நலம் விரும்பிகள் மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுக்கு நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் வேதனையில் ஒன்றை பதிவு செய்கிறேன். என்னுடைய நலம்விரும்பிகளுக்கு நான் அழுவது மனதை பாதிக்கும். சார் நான் ஏப்ரலில் இருந்து இந்த விஷயத்தை சொல்லி வருகிறேன். அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தில் கடந்த ஆண்டுக்கு நிதி வந்துவிட்டது. இந்த ஆண்டுக்கு நிதி வரவில்லை என பதிவு செய்திருந்தேன். அதை சட்டசபை வரைக்கும் பேசினார்கள். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் நிதி வரவில்லை என்பதற்கான எல்லா தகவலையும் தேதியுடன் குறிப்பிட்டு மெயில் அனுப்பினேன். மீதி தகவல்களையும் நான் பொதுவெளியில் போட்டேன்.
சில தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது. அதை பொதுவெளியில் கொடுக்கக் கூடாது என்ற அந்த சென்ஸ் எனக்கு இருக்கிறது. அதன் பிறகு சட்டசபையில் நீங்கள் அந்த விஷயத்தை பேசியதற்கு பிறகு எனக்கு அன்று இரவு ஒரு மெயில் அனுப்பினீர்கள். ஆனால் இன்னை வரைக்கும் ஃபண்ட் வரவில்லை. என்னை கல்லூரியில் இருந்து எலிமினேட் செய்யப் போகிறார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் எய்ம்ஸ்-ல் என்னை பேப்பர் ப்ரெசென்ட் பண்ண கூப்பிட்டிருக்கிறார்கள். நான் அங்கேயும் போக முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் ஃபண்ட் இல்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
