காஞ்சிபுரத்திற்கு புதிய டி.எஸ்.பி.,நியமனம்
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் காவல் கோட்டத்திற்கு, புதிதாக டி.எஸ்.பி., மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று காவல் கோட்டங்கள் உள்ளன. காஞ்சிபுரம் கோட்டத்திற்கான போலீஸ் டி.எஸ்.பி.,யாக சங்கர் கணேஷ், கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, புதிய டி.எஸ்.பி.,யாக ஒரு மாதமாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.


