எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது? ரூ.1.47 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகும் அவலம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சியில் 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடுயின்றி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதியில் இறந்த உடல்கள் சேலம் ரோட்டில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அடக்கம் செய்வதும். விறகு கட்டைகளை கொண்டும் எரியூட்டியும் வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு 1.47 கோடி ரூபாய். கடந்த தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து சேலம் ரோட்டில் உள்ள சுடுகாட்டு பகுதி அருகேயே கலைஞர் நகர்புற மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-2023ம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடைக்கான கட்டடம் கட்டப்பட்டது.


