சிசிடிவியில் கண்காணித்த மாமனாருக்கு நேர்ந்த துயரம்- சினிமா பாணியில் மருமகள் அரங்கேற்றிய பயங்கரம்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல மருந்து நிறுவன அதிபர் ஒருவர், தனது படுக்கையறையிலேயே 26 முறை கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலுக்கியுள்ளது.
நள்ளிரவில் மாமனார் வீட்டில் கொலைகாரர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த அதே நேரத்தில், சொகுசு ஹோட்டலில் தனது கணவருடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த மருமகளே இக்கொலையில் மாஸ்டர் பிரைன் என்பது அம்பலமாகி ஒட்டுமொத்தக் காவல் துறையினரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள 'ரத்தன் ஆர்பிட்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வினீத் மினோச்சா. இவர் தனது மகன் சுப்ரத் மற்றும் மருமகள் ஷாலுவுடன் இணைந்து பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, வினீத்தின் மகனும் மருமகளும் ஒரு நள்ளிரவு பார்ட்டிக்காக வெளியில் சென்றிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது, படுக்கையறையில் வினீத் மினோச்சா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு மகன் அதிர்ச்சியில் உறைந்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
