நான் சொல்றேன் ஜாமீன் கொடு! - நீதிபதியையே மிரட்டிய சுகேஷ் சந்திரசேகர்
கடந்த 2017-ஆம் ஆண்டு ஊழல் வழக்கொன்றில் கைதான சுகேஷ் சந்திரசேகர், கான்ஸ்டபிள் மஞ்சீத்தின் செல்போனைப் பயன்படுத்தி டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி என்று சொல்லி மிரட்டிய வழக்கில் அவருக்கு. டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹர்ஷிதா மிஸ்ரா 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியு மென்பார்கள். பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதற்கேற்ப 17 வயதிலேயே தன் லீலைகளைத் தொடங்கிவிட்டான். கர்நாடக அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிட மும் செல்வாக்கு கொண்ட நபர்போல நடித்து, ஒரு குடும்பத்திடம் சுமார் ரூ.1.14 கோடி மோசடிசெய்ததாக பெங்களூரு போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. அதற்காக அவன் அப்போது கைது செய்யப்பட்டான்.
சுகேஷ் சந்திரசேகர், சுகாஷ் சந்திரசேகர் இன்னும் வேறுபல பெயர்களிலும் செயல்பட்ட இவன், தொலைபேசியில் பெரிய அரசு அதிகாரிபோல பேசுவது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிபோல நடிப்பது, மத்திய அமைச்சக அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொள்வது, அரசியல்வாதிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறுவது, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் போன்ற உயர்ந்த நிறுவனங்களின் பெயர் களைப் பயன்படுத்துவது, பெரிய தொகை கொடுத்தால் அரசு வேலை, ஒப்பந்தம், வழக்கில் உதவி, சிறையிலிருக்கும் நபரை வெளியே கொண்டுவருதல் போன்றவற்றைச் செய்துதருவதாகக் கூறுவது இதுதான் அவனது மோசடி முறை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
