நகர திட்ட சாலைகள் மேம்பாடு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
உடுமலை: உடுமலை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டச்சாலை பணிகளை துவக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உடுமலை நகரம் கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மாநில நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலைக்கு செல்வதற்கான இணைப்பு ரோடுகள் போதியளவு நகரில் இல்லை.
இதனால், அனைத்து வாகனங்களும் நகரின் பிரதான ரோடுகளில் அணிவகுப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு உட்பட பகுதிகளில், நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
