தனியாா் தங்கும் விடுதியில் பெண் கொலை?
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில், பள்ளம் மீனவ கிராமத்தைச் சாா்ந்த செல்வி (50) என்ற பெண் அடையாளம் தெரியாத 35 வயது நபருடன் புதன்கிழமை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபா் தங்கும் விடுதியில் இருநது வெளியே சென்றாராம். அவா் வெகுநேரமாகியும் திரும்பி வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் அறையை திறந்து பாா்த்த போது, காது மற்றும் கழுத்தில் காயங்களுடன் அப்பெண் இறந்து கிடந்தாராம். மேலும் அவரது கம்மல்கள் காணாமல் போனதும் தெரிய வந்தது.
