தங்கும் விடுதியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கணவன் செய்த பகீர் செயல்.. விசாரணையில் அதிர்ச்சி!

பெங்களூருவில் மனைவியை அழைத்து சென்று தங்கும் விடுதியில் தங்க வைத்து கழுத்து நெரித்து கொன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர். 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்த மனைவியுடம் மீண்டும் சேர்ந்த கணவன், கொலைகாரனானது எப்படி?.
பெங்களூருவின் தொட்டபல்லாபுரா நகரில் உள்ள 'சம்ருத்தி' ஹோட்டலுக்கு மேலே உள்ள தங்கும் விடுதி ஒன்றில், 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஹோட்டல் ஊழியர்கள் தகவல் அளித்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அதில் உயிரிழந்தவர் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள நாகரகெரே கிராமத்தைச் சேர்ந்த வித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவர் ஆனந்துடன் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு அறை எடுத்து தங்கிய வித்யா, அன்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு விடுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் அவரது கணவர் ஆனந்த், அறையைப் பூட்டி விட்டு மாயமாகி உள்ளார். மறுநாள் அறையைத் திறக்கவில்லை என ஆனந்திற்கு கால் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போதுதான் விடுதி ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு மாற்று சாவியைப் போட்டு அறையைத் திறந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்ப, மற்றொரு அதிர்ச்சியாக மருத்துவர்கள் ஆய்வில் ID card அணியப் பயன்படும் நாடாவைக் கொண்டு கழுத்து நெரித்து, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
