முதல் போக சாகுபடியை கருதி அணையில் தண்ணீர் பெறும் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கம்பம், செப். 12 முதல் போக நெல் சாகுபடியை கவனத்தில் கொண்டு அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க
முதல் போக நெல் சாகுபடியை கவனத்தில் கொண்டு அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க நீர்வளத் துறை முன்வர கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் முதல் பழனிச்செட்டிபட்டி வரை 14,7070 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும் இருபோக சாகுபடி கடந்த 5 ஆண்டுகளாக பிரச்னையில்லாமல் நடந்தது.
இந்தாண்டு எல்நினோ தாக்கம் காரணமாக ஜுனில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்தது. விவசாயிகளும் முதல் போக சாகுபடியை தாமதமாக துவக்கி உள்ளனர். தற்போது நடவு செய்து ஒரு மாதத்தை கடந்துள்ளது. உத்தமபாளையத்தில் நடவு பணியை இப்போது தான் துவக்கி உள்ளனர்.


