சிலையாக அல்ல சிந்தனையாகத் தேவைப்படுகிறார் பெரியார்! - கவிஞர் கோ.லீலா நேர்காணல்
பொறியாளர், சூழலியல் ஆர்வலர், கவிஞர், கட்டுரையாளர், உரையாளர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகங்களோடு தொடர்ந்து இயங்கிவருபவர் கோ. லீலா. தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களுக்கென்றே போடப்பட்ட தடைகளையெல்லாம் "பெரியார்' எனும் பகுத்தறிவு தடிகொண்டு தகர்த்தெறிந்துவிட்டு, தன்னளவில் சுயசிந்தனையுடைய ஒரு மனுஷியாய் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்.
நீர் வளத்துறை பொறியாளரான இவர் பேசத்தொடங்கினால், சிந்தனைகள் காட்டாற்று வெள்ளம்போல் மடைந்திறந்து பாய்கின்றன. "இனிய உதயம்' வாசகர்களுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து சில துளிகள் இங்கே; சந்திப்பு: புதுகை முருகுபாரதி
திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் பிறந்த திருக்குவளையைச் சேர்ந்தவர் உங்கள் தந்தையார். நீங்கள் திருவாரூரில் பிறந்து கல்வி பயின்றவர். உங்கள் ஊர் நினைவுகள் குறித்து...?

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
