தரமணியில் செமிகண்டக்டர் மையம்; மத்திய அரசு ரூ.190 கோடி உதவி
சென்னை: தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைந்து, தரமணியில், 363 கோடி ரூபாயில் அமைக்க உள்ள மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையத்திற்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 190 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய உள்ளது.
செமிகண்டக்டர் இறக்குமதியை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்க, 'தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030' எனும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்கியது.
எனவே, 'டிட்கோ' மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மை யத்தை அமைக்க உள்ளன.


