வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!
1990-களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் பிறகு வடகொரியாவில் முறைசாரா தனியார் சந்தைகள் வளர்ந்தன.
பொழுதுபோக்கு என்ற வார்த்தைக்கே இடமில்லாத நாடாக அறியப்படும் வடகொரியாவில், மக்களுக்காகப் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், ஆடம்பர வணிக வளாகங்கள் மற்றும் காபி பார்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதுடன், அரசு தனது வணிகக் கட்டுப்பாட்டை இறுக்கும் ஒரு உத்தியாகவே பொழுதுபோக்கு மற்றும் நுகர்வுப் புரட்சியை அதிபர் கிம் ஜாங் உன் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், வொன்சான் கல்மா கடற்கரையில் ரிசார்ட், சாம்ஜியான் நகரில் புதிய ஹோட்டல்கள், ஸ்கை ரிசார்ட்டுகள் என அரசு சார்பில் பல பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

