குருவாயூரில் பக்தர்களுக்கான வசதிகள் என்ன? 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவனந்தபுரம், செப்.11– கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கான
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பிரசாத தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு முழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோவிந்தன் நம்பூதிரி, ‘பக்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்’ எனக்கோரி, தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் புகார் அளித்தார்.

