`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ - வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. | accident caused by teachers' negligence - government school girl student arrives in an ambulance to meet the vellore collector
வேலூர் அருகே ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் - தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார் ரூபிகா.
அன்றைய தினம், ஊசூர் தெள்ளூர் சாலை அருகிலுள்ள அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்வதற்காக சக மாணவிகள் சிலருடன் ரூபிகாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர். மாணவிகளும் அந்தப் பள்ளிக்குச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு மதிய வேளையில் தங்களின் பள்ளிக்குத் திரும்புவதற்காக ஊசூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்குச் சாலையோரமாக நடந்து வந்தனர்.


