ரீல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க வேலுார் கவுன்சிலர்கள் புலம்பல்
வேலுார்: 'வேலுார் மாநகராட்சி பகுதிகளில், த.வெ.க.,வினர் ரீல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க' என, மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புலம்பி தவித்தனர்.
வேலுார் மாநகராட்சி கூட்டம், தி.மு.க., மேயர் சுஜாதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:
எங்கள் வார்டுகளில், அண்மையில் பழுதடைந்த மோட்டாரை, ஆளுங்கட்சியினர் கழற்றி சென்றுவிட்டனர். த.வெ.க.,வினர் என்றால் மோட்டாரை கழற்றலாமா? மாநகராட்சி பகுதிகளில் பராமரிப்பு, வளர்ச்சி பணிகளை கவுன்சிலர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

