இதே நாளில் அன்று
செப்டம்பர் 15: காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரத்தில் நடராஜ முதலியார் - பங்காரு தம்பதியின் மகனாக, 1909ல்
காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரத்தில் நடராஜ முதலியார் - பங்காரு தம்பதியின் மகனாக, 1909ல் இதே நாளில் பிறந்தவர், அண்ணாதுரை எனும் அண்ணா.
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படித்த இவர், வறுமையால் படிப்பை கைவிட்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளரானார். பின், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் சேர்ந்து எம்.ஏ., முடித்தார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசும், எழுதும் திறனால் நாடகங்கள், திரைப்படங் களுக்கு கதை, வசனம் எழுதினார். ஈ.வெ.ரா.,வின் சமூக சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில் சேர்ந்து, தி.க.,விலும் தொடர்ந்தார்.





