வாயில் பீரை ஊற்றி... பள்ளிக் கட்டடத்தில் வைத்து... முதல்வர் தொகுதியில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
மிரண்டுபோன அந்தச் சிறுவன், வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி, தெருவில் இருந்த எங்களிடம் தகவல் தெரிவித்தார். | child abuse case in trichy
போதைப் பயன்பாட்டைக் கண்காணிக்க தனிக்குழுக்கள் அமைக்க வேண்டும். விற்பனை செய்பவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்
சிறுமி ஒருவரைக் கடந்த மூன்று மாதங்களாக மது போதையில் நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், திருச்சியை அதிரவைத்திருக்கிறது. முதல்வர் வெற்றிபெற்ற திருச்சி கிழக்குத் தொகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், காவல்துறை இதை மூடி மறைக்க முயன்றதாகவும் ‘பகீர்’ புகார் கிளம்பியிருக்கிறது.
திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் வடைக்கடை நடத்திவரும் சித்தி வீட்டில் வசித்துவருகிறார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 15, 16 வயதுடைய நான்கு சிறுவர்கள், சிறுமியை மிரட்டிக் கடந்த மூன்று மாதங்களாகப் பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறனர்.


