"தொடரும் முன்னணி வீரர்களின் காயம்... பிசிசிஐ அதிரடி முடிவு!"
பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ச்சியாக இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, சர்வதேசப் போட்டிகளுக்கு இடையே போதிய ஓய்வு இடைவெளியை உருவாக்கும் நோக்கில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பி. சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்கள் தீவிரமாக நடைபெறும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடனடியாகச் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதே இந்த காயங்களுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.




