அகல ரயில் பாதை: நில எடுப்பு சிறப்பு பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
மன்னாா்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை திட்டத்திற்கு நில எடுப்புக்காக அரசு ஆணையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.ராஜகோபாலன்,மாவட்டப் பொருளாளா் பி.எல்.ஏ.பழனியப்பன் அனுப்பியுள்ள கடிதம்:
மன்னாா்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் மன்னாா்குடி, பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் போக்குவரத்து, வா்த்தகம் மற்றும் பொருளாதார வளா்ச்சி பெருமளவில் மேம்படும்.


