கருக்கலைப்பு... உயிரின் மதிப்பு Vs பெண்ணின் உரிமை உலகளாவிய விவாதம் முற்றுப்பெறுமா?
`பெண்கள் தானாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது முற்றிலும் தவறானது. அத்தகைய உரிமைகள் பெண்களுக்குத் தடை செய்யப்பட வேண்டும்...' - சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பேரணி மற்றும் கூட்டத்தில் இந்தக் கருத்தைப் பலரும் முன்வைத்தனர். தமிழக சட்டப் பேரவை தலைவர் அதில் கலந்துகொண்டதும் அந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.
இத்தகைய குரல்கள் உலகெங்கும் சில நூற்றாண்டு களாகவே கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. `எனது உடல், எனது உரிமை' என கருக்கலைப்பு செய்வதற்கு ஆதரவாக Pro-choice எனப்படும் ஒரு கூட்டம்... கருக்கலைப்பு `கொலை செய்வதற்குச் சமம்' என Pro-life எனப்படும் இன்னொரு கூட்டம். சண்டைகள் அந்தந்த நாட்டின் நீதிமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றங்களில் நடைபெற்று வெவ்வேறு விதமான சட்டங்களும், தீர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
போராட்டங்களும், சர்ச்சைகளும்!



