அவசியம் மேகமலை நீர் தேக்கங்களில் கூடுதல் தண்ணீர் தேக்குவது குடிநீர், பாசனத்திற்கு பயன்படும் என கோரிக்கை
கம்பம், செப். 7– மேகமலையில் மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைவேவிஸ, மணலாறு, இரவங்கலாறு அணைகளில்
மேகமலையில் மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைவேவிஸ, மணலாறு, இரவங்கலாறு அணைகளில் தண்ணீர் தேக்கும் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். இதனால் சின்னமனுாருக்கு கிழக்கு பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான கிராமங்கங்களுக்கு குடிநீர், பாசனத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின் நிலையத்தில் 168 மெகா வாட், வண்ணாத்திபாறை வனப்பகுதியில் உள்ள சுருளியாறு நீர் மின் நிலையத்தில் 35 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர முல்லைப்பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ நீர் மின் நிலையங்கள் மூலம் 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரை வைத்து பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைத்து சுருளியாறு மின் நிலையத்தில் மின் சாரம் உற்பத்தியாகிறது.
