மாதம் 51% வட்டி வலை... சிக்கிய 5,000 பேர்... ரூ.500 கோடி மெகா மோசடி!
73 லட்சம் ரூபாயை இழந்த ரேவதி, “மாதம் பெரிய அளவில் வட்டி கிடைக்கும்; ஒரே வருடத்தில் முதலீடு இரண்டு மடங்காகத் திரும்பக் கிடைக்கும் என நண்பர்கள், உறவினர்கள் கூறினர்.
சேலத்தைச் சேர்ந்த தனியார் பெயின்ட் நிறுவன மேலாளர் மோகன் முரளி, ‘ப்ராஃபிட் எவர் ஆன்லைன் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் 28 லட்ச ரூபாயை முதலீடாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவருகிறது’ என்று சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் அண்மையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சுமார் 5 ஆயிரம் பேரிடம் 500 கோடி ரூபாய் வரை பெற்று மெகா மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப்போயிருக்கிறார்கள்.
மோகன் முரளியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளித்துவருகின்றனர். நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டுவந்த மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தலைமறைவாக இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


