நீலகிரி வன தெய்வ கோவில்களில் பாரம்பரிய வழிபாடு..! திரளான பக்தர்கள் தரிசனம்..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன தெய்வ கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எராளமான பக்தர்கள கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன தெய்வ கோவில்களில் அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மசினகுடி, பொக்காபுரம், மாயார், சொக்கநல்லி, சிரியூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான மசினகுடி, பொக்காபுரம், மாயார், சொக்கநல்லி, சிரியூர் ஆகிய இடங்களில் பெண் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக விளங்குகின்றன. இந்த வனக் கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், அமாவாசை தினங்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.

