8 கிலோ எடையுள்ள கருப்பை முட்டைப்பை கட்டி அகற்றம்-அரசு மருத்துவமனை சாதனை
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 45 வயதுடைய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த சுமார் 8 கிலோ எடையுள்ள கருப்பை முட்டைப்பை கட்டி பல்துறை மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த அந்தப் பெண் வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த வீக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருப்பை முட்டைப்பை புற்றுநோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு பல்வேறு மருத்துவ மற்றும் கதிரியக்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8 கிலோ எடையுள்ள பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சை புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் தலைமையில், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறை பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் மிருணாளினி வழிகாட்டுதலுடன் மருத்துவர்கள் நீரஜா, சுகன்யா, சாய் மிருணாளினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மயக்கவியல் சிகிச்சையை மருத்துவர் சந்தோஷ் மாதவன் வழங்கினார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

