ஆகஸ்டு மாத ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 26.12 சதவீதம் அதிகரித்து 4.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே ஆகஸ்ட் மாத வரலாற்றில் பதிவான அதிகபட்ச ஏற்றுமதி மதிப்பு என மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 14.10 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் 'பிரிக்ஸ்' நாடுகளில் இந்திய பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


