கிரைம் செய்திகள்
செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி சூலூர் அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோஜ், 35. மளிகை கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன், 43 நேற்று மதியம் கடைக்கு வந்துள்ளார். பல ஆண்டுகளாக பழக்கம் என்பதால் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென மணிகண்டன், மனோஜ் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு, மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்காவுடன் பெண் கைது குன்னத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.