தீவனத் தட்டுப்பாடு: பொய்கை சந்தையில் கால்நடைகள் விலை சரிவு
சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கடுமையான தீவனத் தட்டுப்பாடு காரணமாக பொய்கை மாட்டுச் சந்தையில் கால்நடைகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்திருந்த கால்நடைகள்.
வேலூா் அருகே பொய்கை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தைக்கு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகாவிலிருந்தும் பல்வேறு ரக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. சீசன் நேரங்களில் இங்கு ரூ. 2 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

