மாற்றுப்பாதை முறையாக இல்லாததால் அலைக்கழிப்பு :பழநி - புது தாராபுரம் ரோடு ரயில்வே கிராசிங்கில்...
பழநி:பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில் உள்ளூர் மக்கள் சென்றுவர மாற்றுப்பாதை முறையாக இல்லாததால் பல கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டு கால கோரிக்கைக்கு பின் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையில் புது தாராபுரம் ரோடு மொல்லம் பட்டி பிரிவு, பழைய தாராபுரம் ரோடு மானுார் பிரிவு, உடுமலை ரோடு தாழையூத்து, திண்டுக்கல் ரோடு மாட்டுப்பாதை ஆகிய பகுதிகள் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் பழநி நகருக்குள் வர அறிவுறுத்தப்பட்டது. இலகுரக வாகனங்கள் சங்கிலி கேட் வழியாக நகருக்குள் வர அறிவுறுத்தப்பட்டது. போலீசார் கண்காணித்து மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.




