பலவித சத்துகள் நிறைந்த நரிப்பயறு... பசுந்தாள் உரம், கால்நடைத் தீவனம்!
செடிகளைத் தரையிலிருந்து அரையடி உயரத்துக்கு விட்டுட்டு அதுக்கு மேல உள்ள பகுதியை மட்டும் மெஷின் மூலம் அறுவடை பண்ணி, நெற்றுகளிலிருந்து பயறைப் பிரிப்பேன்.
4 ஏக்கர்... ரூ.1,12,000 லாபம்!
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் கணிசமான பரப்பில் நரிப்பயறுச் சாகுபடி செய்து வந்தனர். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் ஆகியவற்றில் பரவலாகக் கோடைக்காலப் பயிராக நரிப்பயறுச் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இது, வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிர். மானாவாரி நிலத்திலும் பயிர் செய்யலாம். களையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வகையான மண்கண்டங்களில் செழிப்பாக விளையும்.
இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்ததால், விவசாயிகள் பலரும் இதைத் தொடர்ந்து சாகுபடி செய்து வந்தனர். ஆனால், `காலத்தின் கோலம்' என்று சொல்வதுபோல் நரிப்பயறை விவசாயிகள் கைவிட்டு விட்டது பெரும் சோகம்தான். கடந்த பல ஆண்டுகளாக, நிலங்களில் நரிப்பயறை காண்பதென்பது மிகவும் அரிதாகவே இருந்து வருகிறது.






