குமாரக்குடி வீராணம் ஏரி வடிகால் வாய்க்கால் அருகே புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
சேத்தியாத்தோப்பு, செப்.15– சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வீராணம் ஏரி வாய்க்கால் குறுகிய வளைவு
சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வீராணம் ஏரி வாய்க்கால் குறுகிய வளைவு பாலம் அருகே புதிய பாலம் கட்டுமானப்பணியை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு திறந்துவிட வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை–கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் வீராணம் ஏரி வடிகால் வாய்க்கால் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.பாலத்தில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், லாரிகள், டாரஸ், டிப்பர் லாரிகள், டூரிஸ்ட் பஸ்கள் என 24 மணிநேரமும் சென்று வருகின்றனர்.
இந்த குறுகிய பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தனர். விபத்து அபாயம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.




