பத்திரப்பதிவு துறையில் ரூ.7.83 கோடி வருவாய் இழப்பு; சட்டசபையில் அறிக்கை தாக்கல்
சென்னை: கடந்த, 2023 - 24ம் நிதி ஆண்டில், பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 983 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 2023 - 24ம் நிதி ஆண்டில், 647 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 114 மாதிரிகள் எடுக்கப்பட்டு, தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இந்த அலுவலகங்களில், 2023 - 24ம் நிதி ஆண்டில், 13,303 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, 2022- 23ம் நிதி ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயில், 75.76 சதவீதம் தான் என்பது தணிக்கையில் தெரியவந்தது. திருப்போரூர், பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகங்களில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூன்றாம் தரப்புக்கு விற்பதற்காக நிலம் வாங்கியுள்ளனர்.



