மின் கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு
எண்ணுார்:எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள உயர்மட்ட மின் கேபிள் அறுந்ததால், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சென்னை புறநகர் ரயில் சேவையில், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் என, இரு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள உயர்மட்ட மின் கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் இரு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டன.

