கனமழையால் வெள்ளப்பெருக்கு உ.பி.,யில் 3.54 லட்சம் பேர் பாதிப்பு
லக்னோ:உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3.54 லட்சம் பேர்
உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 மாவட்டங்களில் இருந்து 17,500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உ.பி.,யில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சித்ரகூட் மாவட்டத்தில் பாயும் மந்தாகினி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். மந்தாகினி ஆற்றில் 443 அடி வெள்ளம் பாய்ந்த நிலையில் தற்போது நீர்மட்டம் 420 அடியாக குறைந்துள்ளது.
கனமழையால் அம்ரோஹா, அயோத்தி, ஆசம்கர், பதாயூன், பல்லியா, பாராபங்கி, பஸ்தி, சந்தோலி, பரூக்காபாத், காசிப்பூர், கோண்டா, கோரக்பூர், ஹர்தோய், காஸ்கஞ்ச், கான்பூர், லக்கிம்பூர் கேரி, மிர்சாபூர், முரதாபாத், பிலிபித், பிரயாக்ராஜ், ரேபரேலி, ராம்பூர், சந்த் கபீர் நகர், ஷாஜகான்பூர், உன்னாவ் மற்றும் வாரணாசி ஆகிய 26 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

