இலவச வேட்டி, சேலைக்கு கூலி நிர்ணயிக்க ஐவர் குழு
ஈரோடு:இலவச வேட்டி, சேலைக்கான கூலியை நிர்ணயம் செய்ய, கைத்தறி மற்றும் துணி நுால் துறை ஒரு குழுவை நியமித்துள்ளது.
வரும் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில், அரிசி கார்டு தாரர்களுக்கு வழங்க, 1.77 கோடி இலவச வேட்டி, 1.77 கோடி இலவச சேலை உற்பத்திக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு, 3.75 மீட்டர் நீள, அகலவேட்டி தயாரிக்க, 24.30 ரூபாய் கூலியாக அரசு வழங்கியது. தற்போது, 2 மீட்டராக குறைத்துள்ளதால், 14.68 ரூபாய் மட்டுமே கூலி கிடைக்கும். எனவே வேட்டி பணிக்கு ஏற்ப, 24.48 ரூபாயாகவும், சேலைக்கு, 63.36 ரூபாயாக கூலியை உயர்த்தி வழங்க விசைத்தறி நெசவாளர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் கைத்தறி மற்றும் துணி நுால் துறை கூடுதல் இயக்குனர் உத்தரவில் கூறியதாவது:
