நீலகிரி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் காக்கும் ஆதிமலை..! இந்தியா முழுவதும் விற்பனையாகும் மதிப்பு கூட்டப்பட்...
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பழங்குடி மக்கள் சேகரிக்கும் காட்டுத்தேன், குறுமிளகு, காப்பி போன்ற இயற்கை பொருட்களை மதிப்புக்கூட்டி இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
நீலகிரி மலை மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பணியர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வனங்கள் மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றனர். இயற்கையாக கிடைக்கும் பல்வேறு பொருட்களை சேகரித்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

