தாராபுரம் இடைத்தேர்தல்: கட்சி விளம்பரம் அகற்ற உத்தரவு
திருப்பூர்: ‘‘தனியார் கட்டடங்களில் அனுமதியின்றி வைத்துள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை, தேர்தல் அறிவிப்பு வெளியான, 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும்,’’ என, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சதீஷ் முன்னிலை வகித்தார். தேர்தல் தாசில்தார் தேவராஜ் வரவேற்றார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:


