ஸ்கூட்டர் மீது கார் மோதி இளம்பெண் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த காளசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சந்தியா, 25; இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் சந்தியா வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது தந்தை சேகருடன் உலகங்காத்தான் கிராமத்தில் இருந்து காளசமுத்திரம் கிராமத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பைக்கை சந்தியா ஓட்டினார்.



