ஓடும் ரயிலில் ரூ.3 கோடி நகைகள் கொள்ளை தலைமறைவான மேலும் மூவர் அதிரடி கைது
விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை திருடிய வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் தீபக், 47. நகை வியாபாரி. கடந்த ஜூலை 23ல், மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் தான் எடுத்துச் சென்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான அரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் அடங்கிய மாதிரிகளை காண்பித்து ஆர்டர் பெற்றார்.
பின்னர், அங்கிருந்து அனந்தபுரி – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னைக்கு புறப்பட்டார். மறுநாள் காலை (24ம் தேதி), திருச்சியை கடந்து ரயில் வந்தபோது, கைப்பை மற்றும் நகைப்பையை வைத்துவிட்டு தீபக் கழிவறைக்கு சென்றார்.



