உளுந்துார்பேட்டையில் வரும் 19 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை பாலியில் வரும் 19 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பத்மஜா செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது. உளுந்துார்பேட்டை பாலியில் உள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 19 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.


